பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் யாழ்.வருகை கண்டித்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் யாழ்.வருகை கண்டித்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம்..!

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் யாழ்ப்பாண வருகையை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை நடத்தப்பட்டுள்ளது. 

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்,

காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும்,இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு