SuperTopAds

எவரை கண்டும் நான் ஓடி ஒளியவில்லை!! -உக்ரைன் ஜனாதிபதி துணிச்சல் பேச்சு-

ஆசிரியர் - Editor II
எவரை கண்டும் நான் ஓடி ஒளியவில்லை!! -உக்ரைன் ஜனாதிபதி துணிச்சல் பேச்சு-

எவரையும் பார்த்து நான் பயப்பிடவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ்வில் தான் இருக்கிறேன் என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா படைகள் உக்ரைன் மீது இன்று செவ்வாய்க்கிழமை 13 ஆவது நாளாக தாக்குதல் மேற்கொண்டுவருகிற நிலையில் உக்ரைன் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ரஷ்ய தரப்பிலிருந்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி நேற்று திங்கட்கிழமை புதிய காணொளியொன்றை வெளியிட்டிருந்தார். தலைநகர் கீவ்வில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்தவாறு ஸெலன்ஸ்கி குறித்த காணொளியை பதிவு செய்துள்ளார். 

அதில் அவர், “நான் தலைநகர் கீவ் வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன். யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புட்டினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகரில் தான் இருக்கப்போகிறேன்.

எங்களின் இந்த தேசபக்தி போரில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனிய ஆயுத படைகளின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் மீண்டும் கூறுகிறேன்.

நாங்கள் தொடர்ந்து போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் அனைவரும் களத்தில் இருக்கிறோம். என்னுடன் எனது குழுவும் உள்ளது” எனத்  தெரிவித்துள்ளார்.