ரஷியாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!! -உக்ரைன் தகவல்-

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 13 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்நிலையில், கார்கிவ் அருகே ரஷிய மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவை உக்ரைன் படைகள் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் ஜெராசிமோவ் ஒரு மூத்த இராணுவ அதிகாரி, இரண்டாவது செச்சென் போரில் பங்கேற்றவர் என்பதுடன் அவர் கிரிமியாவைக் கைப்பற்றியதற்காக பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.