டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! காரில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! காரில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி..

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் திருகோணமலை - ஹொரவபொத்தானை வீயில் மரதன்கடவை பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

ரத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரும் 

இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் 

மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு