SuperTopAds

ரஷியா மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்பு!! -தயாராக இருக்குமாறு எச்சரிக்கும் இங்கிலாந்து-

ஆசிரியர் - Editor II
ரஷியா மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்பு!! -தயாராக இருக்குமாறு எச்சரிக்கும் இங்கிலாந்து-

உக்ரைன் மோதலில் ரஷியா மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள இங்கிலாந்து இதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இங்கிலாந்து வெளியுறத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்:- 

ரஷ்யா - உக்ரைன் மோதல் ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன், அது பல வருடங்களாக இருக்கலாம். ரஷியா வலுவான சக்திகளைக் கொண்டுள்ளது. 

இருந்தபோதும் உக்ரேனியர்கள் தைரியமானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம், அவர்கள் தங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக நிற்க உறுதியாக உள்ளனர். 

மேலும் அவர்கள் போராடுவதில் உறுதியாக உள்ளனர். உக்ரேனியப் படைகள் ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்து வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

இருந்தபோதும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்னும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும். இந்த போர் புதினின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். இந்தப் போரில் அவர் மிகவும் விரும்பத்தகாத வழிகளைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார் என்று நான் அஞ்சுகிறேன். 

இந்த மோதல் மிகவும் இரத்தக்களரியாக இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன். ரஷ்யா இன்னும் மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உலகம் தயாராக இருக்க வேண்டும். 

இருப்பினும், உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கவனித்து வருகிறது, இதனால் புதினுக்கு தனிப்பட்ட முறையில் கடுமையான விளைவுகள் இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.