SuperTopAds

ஒத்துழைக்காவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்!! -அச்சுறுத்தும் ரஷியா-

ஆசிரியர் - Editor II
ஒத்துழைக்காவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்!! -அச்சுறுத்தும் ரஷியா-

500 டொன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா நாடுகளின்; மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சுறுத்தியுள்ளது. 

உக்ரைன் மீது ரஷியா இன்று ஞாயிற்றுக்கிழமை 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை ரஷியா மறைமுகமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும் என்றும் உலக நாடுகளை ரஷியா அச்சுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து, ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் ஜெனரல் ருவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 4 அமெரிக்கர்கள், 2 ரஷியர்கள், ஒரு ஜெர்மனியர் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர். 

அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் சில நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. மேலும், ரஷிய இயந்திரங்கள் மூலமாக விண்வெளி நிலையம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால் தனக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் விண்வெளி நிலை செயல்பாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும். இதனை பாதுகாக்கப்படவில்லை என்றால் 500 டொன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சுறுத்தியுள்ளது.