பதிலடி கொடுக்கும் உக்ரைன் படை!! -ரஷியாவிடம் வீழ்ந்த கீவ் விமான நிலையத்தை மீள கைப்பற்றியது உக்ரைன்-

ரஷியாவுக்கு எதிராக முழு இராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முன்னெடுக்கும்படி இராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது நேற்று வியாழக்கிழமை ரஷியா போர் தொடுத்தது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் 2 உலங்குவானூர்திகளை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் இராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. மேலும், ரஷியாவுக்கு எதிராக முழு இராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்கும்படி இராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முழு இராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும்.
ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். இதற்கான நிதியை ஒதுக்கும்படி உக்ரைன் அமைச்சரவையை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.