யாழ்.பருத்தித்துறை - நெல்லியடியில் 6.5 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - நெல்லியடியில் 6.5 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது..!

யாழ்.பருத்தித்துறை - நெல்லியடி பகுதியில் சுமார் 6.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 817 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று 14 ஆம் திகதி நெல்லியடி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிளில் 

817 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 6.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டள்ளது. இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் குடத்தனை பிரதேசங்களைச் சேர்ந்த

 23 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் 

கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு