SuperTopAds

கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை

ஆசிரியர் - Editor III
கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்  லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் வியாழக்கிழமை  கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  எம் .ரம்சின் பக்கீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட   சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டார்.

 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள் ,சுற்று சூழல் ,பொலிஸ்

உத்தியோகத்தர்களின்,தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன் ,பொலிஸார் பயன்படுத்தும் வாகானங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.