ஐ.பி.எல் தொடரில் புதிதாக களமிறங்கும் 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' அணி!! -தலைவராக கே.எல்.ராகுல்-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரில் புதிதாக களமிறங்கும் 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' அணி!! -தலைவராக கே.எல்.ராகுல்-

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் 15 ஆவது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன. இந்நிலையில் ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலும் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.  

இதில் லக்னோ அணி கே.எல் ராகுலை 17 கோடி ரூபாவிற்கு தெரிவு செய்துள்ளது. இவர் அந்த அணியின் தலைவராக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (9.2 கோடி ரூபா) மற்றும் ரவி பிஷ்னாய் (4 கோடி ரூபா) ஆகியோரும் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல் ரி-20 போட்டிகளில் பங்கேற்றபோது புனே அணியை பெற்றிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை பெற்றுள்ள கோயங்கா, இதற்கும் சூப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு