வீதியில் நடந்து சென்ற சிறுமி சுட்டுக் கொலை!! -குறி தவறி நடந்த பரிதாப சம்பவம்-

ஆசிரியர் - Editor II
வீதியில் நடந்து சென்ற சிறுமி சுட்டுக் கொலை!! -குறி தவறி நடந்த பரிதாப சம்பவம்-

அமெரிக்கா நாட்டிலுள்ள சிகாகோ நகர வைத்திய பரிசோதகர் அலுவலகம் அருகே வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமி இனந்தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயரிழந்துள்ளார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், குறித்த சந்தேக நபர், இளைஞர் ஒருவரை கொல்ல முயற்சித்தவேளை குறி தவறி வீதியில் சென்ற சிறுமி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும் குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய்வெடுக்க போவதில்லை என்று பொலிஸ் கண்காணிப்பாளர் டேவிட் பிரவுன் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு