மும்பை அணிக்கு குட்பாய் சொன்ன ஹர்திக் பாண்டியா!! -புதிய அணியில் தலைவராகிறார்-

ஆசிரியர் - Editor II
மும்பை அணிக்கு குட்பாய் சொன்ன ஹர்திக் பாண்டியா!! -புதிய அணியில் தலைவராகிறார்-

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடருக்கான வரைவுப்பட்டியலை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் அணி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, அகமதாபாத் அணி, சகல துறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை தலா 15 கோடி ரூபாய்க்கும், {ப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அளிப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு