சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!!

ஆசிரியர் - Editor II
சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!!

பங்களாதேஷின் காணாமல் போயிருந்த பிரபல நடிகையான ரைமா இஸ்லாம் ஷிமு (வயது 45) சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்த நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, நேற்று முன்தினம் திங்கட்கிழமை கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலத்தின் அருகே சாக்குமூட்டைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், நடிகையின் சடலத்தை மீட்டுள்ளதுடன், அவரின் உடலில் பல காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். 

அத்துடன், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்யப்பட்டிருக்காலம் எனவும், பின் அவரது சடலம் பாலத்தின் அருகே வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் இதுவரை 25ற்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர், பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு