ரசிகர் கேட்ட கேள்வி!! -கடுப்பான கேப்ரில்லா-

ஆசிரியர் - Editor II
ரசிகர் கேட்ட கேள்வி!! -கடுப்பான கேப்ரில்லா-

விஜய் ரீவின் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் ஒருவரான கேப்ரில்லா, தற்போது சின்னத்திரை தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். 

அவர் இப்போது 'ஈரமான ரோஜாவே' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேப்ரில்லாவிடம் பேசிய ஒருவர், 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த அவர்:- 'சீரியலை சின்ன விசயமாக நினைக்கவில்லை. சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ, ஒரு நடிகராக நாம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்லும் சின்னத்திரை ஒன்றும் சின்ன விசயமல்ல' என்று பதில் கூறியுள்ளார்.

அதே கேள்வியை மீண்டும் ஒரு ரசிகர் கேட்க, கடுப்பான அவர், 'இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ, உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? உங்க வேலைய பத்தி நான் கமெண்ட் பன்றேனா? வாழ விடுங்க' என காட்டமாக பதில் கொடுத்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு