கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தார் திரிஷா!!

ஆசிரியர் - Editor II
கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தார் திரிஷா!!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 7 ஆம் திகதி நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று புதன்கிழமை அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், 'இதுவரை எந்த ஒரு அறிக்கையிலும் நெகட்டிவ் என்ற வார்த்தையை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அனைவரின் அன்புக்காகவும் வேண்டுதல்களுக்காவும் நன்றிகள். இப்போது நான் 2022ற்க்காக தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு