சகல வகையான கிரிக்கெட்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு!! -கிறிஸ் மோரிஸ் திடீர் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சகல வகையான கிரிக்கெட்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு!! -கிறிஸ் மோரிஸ் திடீர் அறிவிப்பு-

தென்னாபிரிக்க கிரிகெட் அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தமது நாட்டின் உள்ளூர் அணியான டைட்டன்ஸின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாகவும் கிறிஸ் மோரிஸ் ஓய்வு குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் 69 போட்டிகளில் தென்னாபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். மேலும் உலகெங்கிலும் உள்ள சர்வதேச ரி-20 லீக்குகளிலும் அவர் தனது திறனை வெளிப்படுத்தி வந்தார்.

குறிப்பாக அவர் 2021 இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு