யாழ்.இளைஞன் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்!!

ஆசிரியர் - Editor II
யாழ்.இளைஞன் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்!!

அவுஸ்திரேலியா நாட்டின் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள கடலில் மூழ்கி பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார். அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்திருக்கிறார்கள். 

நீண்ட நேரம் கடலில் தேடிய பின்னர், அன்று மாலையளவில் சிறிபிரகாஸின் சடலம் கடற்கரையில் தென்மேற்கு கரையிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. குறித்த கடல் விக்டோரியாவின் மிக ஆபத்தான கடற்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு