யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை! 43 இந்திய மீனவர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை! 43 இந்திய மீனவர்கள் கைது..

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பற்றுள்ளது. சுமார் ஆறு படகுகளில் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் அவர்களது படகுகளும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தென்னரசு, லியோன், பீட்டர், கருப்பையா பினால்ட்டன் ஆகியோரது படகுகளே கைது செய்யப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு