இரண்டாவது எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor II
இரண்டாவது எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!!

இரண்டாவது லங்கா ப்றீமியர் லீக் எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது. 

5 அணிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த தொடரின் முதல் சுற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த தொடரின் இறுதி போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி ஹம்பாந்தொட்டை சூரியவெள விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. அத்துடன், இந்த தொடரை பார்வையிட 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி க்ளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு