இலங்கையர் கொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் –பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

ஆசிரியர் - Editor I
இலங்கையர் கொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் –பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான்-சீல்கொட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு