பாகிஸ்தானில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர், 100 பேர் கைது, விசாரணை கோருகிறது இலங்கை..

ஆசிரியர் - Editor I
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர், 100 பேர் கைது, விசாரணை கோருகிறது இலங்கை..

இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

குறித்த இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியால்கோட் நகரில் வைத்து அவர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அவரது உடல் எரிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்ப்பதாக சிறிலங்கா  வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு