சிறுத்தை கைவ்விச் சென்ற குழந்தை!! -விரட்டிச் சென்று போராடி மீட்ட வீரத் தாய்-

ஆசிரியர் - Editor II
சிறுத்தை கைவ்விச் சென்ற குழந்தை!! -விரட்டிச் சென்று போராடி மீட்ட வீரத் தாய்-

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மலைவாழ் தாயொருவர் சிறுத்தை கவ்விச் சென்ற தன் குழந்தையை, சுமார் ஒரு கிலோ மீற்றல் துரம்வரை துரத்திச் சென்று போராடி மீட்டுள்ளார்;.

மத்தியப் பிரதேசம், சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் புலிகள் காப்பகத்துக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிரண், தன் குழந்தைகளுடன், குடிசை வாசலில் இருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, அவருடைய, 8 வயது மகனை கவ்விச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தன் மற்ற இரு குழந்தைகளை குடிசைக்குள் அனுப்பிவிட்டு, சிறுத்தையை துரத்திச் சென்றுள்ளார். காட்டுக்குள் ஒரு கி.மீ தூரத்துக்கு சென்ற அவர், சிறுத்தையை கம்பால் அடித்து தாக்கினார்.

அதையடுத்து, குழந்தையை விட்ட அந்த சிறுத்தை, அவரை தாக்கியுள்ளது சிறுத்தையுடன் அவர் போராடியுள்ளார். இதற்கிடையே, சத்தம் கேட்டு கிராம மக்களும் அங்கு வந்தனர். அதையடுத்து, சிறுத்தை காட்டுக்குள் தப்பிச் சென்றது. சிறுத்தை தாக்கியதில், கிரண் மற்றும் அவருடைய மகனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு