அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சம் மோசடி!! -எடப்பாடியின் உதவியாளர் கைது-

ஆசிரியர் - Editor II
அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சம் மோசடி!! -எடப்பாடியின் உதவியாளர் கைது-

அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தார் என்று பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரை சேலம் குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரான மணி, நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 13 இலட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், வேலை பெற்றுக் கொடுக்காமலும், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக கடந்த மாதம் தமிழ்ச்செல்வன் சேலம் எஸ்.பி.யிடம் முறைப்பாடு செய்தார். 

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மணியை தேடி வந்தனர். இந்த நிலையில், அதிகாலையில் நடுப்பட்டியிலுள்ள வீட்டுக்கு வந்த மணியை பொலிஸார் கைது செய்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு