கிரிப்டோ கரன்ஸிகளை தடைசெய்ய இந்தியா திட்டம்! குளிர்கால கூட்டத்தொடரில் சட்டமூலம் தாக்கல்.

ஆசிரியர் - Editor II
கிரிப்டோ கரன்ஸிகளை தடைசெய்ய இந்தியா திட்டம்! குளிர்கால கூட்டத்தொடரில் சட்டமூலம் தாக்கல்.

இந்தியாவில் சகல தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடைசெய்யும் சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது. 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் இந்தியாவில் தடை செய்ய வழிவகை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்திய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 

இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிக்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கும் வகையில் சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு