10 பேர் உயிரிழக்க காரணமான படகு விபத்து..! சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
10 பேர் உயிரிழக்க காரணமான படகு விபத்து..! சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது..

கிண்ணியா  - குறிஞ்சாக்கேணி விபத்தில் 10 பேர் உயிரிழக்க காரணமான படகு விபத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, கிண்ணியா காவல்துறையினரால் ஒருவரும், 

திருகோணமலை காவல்துறையினரால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு