கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்!!

ஆசிரியர் - Editor II
கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்!!

தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் டெல்லி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கௌதம் கம்பீர், அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.

இந்நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவரின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு