தேசிய இளையோர் விளையாட்டு போட்டியில் யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட ஆண்/ பெண் அணிகள் சொந்த மண்ணில் தங்க பதக்கம் வென்று சாதனை..

ஆசிரியர் - Editor I
தேசிய இளையோர் விளையாட்டு போட்டியில் யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட ஆண்/ பெண் அணிகள் சொந்த மண்ணில் தங்க பதக்கம் வென்று சாதனை..

33வது தேசிய இளையோர் விளையாட்டு விழாவின் ஒரு பகுதியான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த போட்டிகளில் யாழ்.மாவட்ட ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகியன தங்க பதக்கத்தை பெற்றிருக்கின்றன. 

அரை இறுதி ஆட்டத்தில் ஆண்கள் அணி பலமான கொழும்பு நகர அணியினரை 72க்கு 56 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கொண்டது, 

இறுதிப்போட்டியில் ஹம்பகா அணியுடன் பலப்பரீட்சை நடாத்தி 72 க்கு 55 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றது. 

பெண்கள் அணி அரை இறுதி போட்டியில் ஹம்பகா அணியுடன் மோதி 36 க்கு 18 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டு 

இறுதிப் போட்டியில் கொழும்பு நகர அணியினரை 43 க்கு 13 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவாக வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றது. 

மேலும் 6 வது வருட சம்பியன் பட்டத்தையும் தக்கவைத்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு