பெண் வைத்தியர்களுக்கு பாலியல் கொடுமை!! -அசர வைத்தியசாலை வைத்தியர்கள் 2 பேர் அதிரடி கைது-

ஆசிரியர் - Editor II
பெண் வைத்தியர்களுக்கு பாலியல் கொடுமை!! -அசர வைத்தியசாலை வைத்தியர்கள் 2 பேர் அதிரடி கைது-

பெண் வைத்தியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்னை ராஜீவ்காந்தி அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டு 2 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள அரச பொது வைத்தியசாலைகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட வைத்தியசாலைகளாக சென்னை ராஜீவ்காந்தி அரச பொது வைத்தியசாலை உள்ளது. 

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கிய போது ராஜீவ்காந்தி அரச பொது வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர்கள்  தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரச இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.

கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் வைத்தியர்களும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு தங்கியிருந்த வைத்தியர் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் பெண் வைத்தியர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று மற்றொரு வைத்தியர் மோகன்ராஜ் (வயது 28), வேறொரு பெண் வைத்தியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பெண் வைத்தியர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வைத்தியர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

தமிழகத்தின் பிரபல அரசு ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் 2 பேர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு