கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையிலிருந்து 10 வயது மகளுடன் தப்பி ஓடிய தாய்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையிலிருந்து 10 வயது மகளுடன் தப்பி ஓடிய தாய்..!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான தாயும் 10 வயதான மகளும் தப்பி ஓடியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

காய்ச்சல் மற்றும் தடுமல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று சென்றிரந்த 31 வயதுடைய தாயும் அவரது 10 வயதான மகளுக்கும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

சிகிச்சைக்காக வார்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு நோயாளர்கள் அனுமதிக்கும் அறைக்கு முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்திருந்த நிலையில், சிற்றூழியர் அழைத்துச் செல்வதற்காக நோயாளியை தேடியபோது 

தாயும் மகளும் வைத்தியசாலையை விட்டு தப்பியோடியுள்ளனர். குறித்த இருவரும் சீனக்குடா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு