யாழில் நாளை இந்தியப் பத்திரிகையாளரின் நூல் வெளியீடு

ஆசிரியர் - Admin
யாழில் நாளை இந்தியப் பத்திரிகையாளரின் நூல் வெளியீடு

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணன் எழுதிய “ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்” நூல் அறிமுகவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-04.30 மணி முதல் நல்லூர் கமத்தொழில் திணைக்கள வீதியிலுள்ள யாழ். முகாமையாளர் சங்கத்தில் இடம்பெறவுள்ளது.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெறவுள்ள விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பொறியியல் கலாநிதி க. விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் ஆகியோர் நூல் ஆய்வுரைகளை நிகழ்த்துவர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்துரைகளையும் ஆற்றவுள்ளனர். ஏற்புரையை நூலாசிரியர் ராமகிருஷ்ணன் நிகழ்த்துவார்.

இந்த நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியுமென விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு