வடகொரியாவில் பெரும் உணவு பஞ்சம்!! -குறைவாக சாப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
வடகொரியாவில் பெரும் உணவு பஞ்சம்!! -குறைவாக சாப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவு-

வடகொரியா நாட்டில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சத்தால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடகொரியாவில் பயிர்கள் சேதம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு 'சீல்' வைத்துள்ளது.  குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது. 

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டொலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 3,300 ரூபாவாகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு