யூ.டி.யூப் பார்த்து குழந்தை பெற்ற மாணவி!! -3 நாட்களுக்கு பின் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்-

ஆசிரியர் - Editor II
யூ.டி.யூப் பார்த்து குழந்தை பெற்ற மாணவி!! -3 நாட்களுக்கு பின் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்-

சமூகவலைத்தளமான யூ.டி.யூப் பார்த்து மாணவி ஒருவர் தனக்குதானே பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பெற்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தனது வீடு அருகே உள்ள 21 வயது இளைஞருடன் அந்த மாணவி பழகி வந்துள்ளார். 

அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். மாணவி, இத்தகவலை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து விட்டார். 

அதே நேரம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவி நிறைமாத கர்ப்பிணி ஆனார். கடந்த 20 ஆம் திகதி மாணவிக்கு பிரசவ வலி வந்தது. என்ன செய்வது என்று யோசித்த மாணவி, பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது பற்றி யூ டியூப்பில் பார்த்தார்.

பின்னர் அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று யூ டியூப்பில் பார்த்த தகவல்களின் அடிப்படையில் அவரே தனக்குதானே பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம் போல் நடமாடிய மாணவி அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்கு செல்வதை கண்ட பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அப்போது அந்த அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பெற்றோர், மாணவியின் அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு குழந்தை இருப்பதை கண்டனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியிடம் அதட்டி கேட்டபின்னர், நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதன் பின் மாணவியையும், குழந்தையும் வைத்தியாசலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு