பட்டாசு வர்த்தக நிலையத்தில் திடீர் தீ!! -5 பேர் உடல் கருகி பலி-

ஆசிரியர் - Editor II
பட்டாசு வர்த்தக நிலையத்தில் திடீர் தீ!! -5 பேர் உடல் கருகி பலி-

இந்தியாவின் தமிழகம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம் நகரில் உள்ள பட்டாசு வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறித்த சம்பவத்தில், 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு