3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! -சீனா அரசு உத்தரவு-

ஆசிரியர் - Editor II
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!! -சீனா அரசு உத்தரவு-

சீனா நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் சினோபார்ம், சினோவாக் என்னும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு இதுவரை 223 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 105 கோடி பேர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அடுத்தாண்டு சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் சூழலில் அங்கு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளன. இந்நிலையில், குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹ_பெய், புஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹ_னான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு