அடுத்த போட்டியில் இஷான் கிஷனா? ரோகித்தா? -நிருபர் கேள்வியால் கோபமடைந்த கோலி-

ஆசிரியர் - Editor II
அடுத்த போட்டியில் இஷான் கிஷனா? ரோகித்தா? -நிருபர் கேள்வியால் கோபமடைந்த கோலி-

ரி-20 உலக கிண்ண அடுத்த போட்டியில் இஷான் கிஷனை அணியில் சேர்த்துவிட்டு ரோகித் சர்மா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்துள்ளார். 

துபாயில் நேற்று நடந்த ரி-20 உலகக் கோப்பைப் போட்டியின் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது நிருபர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து  இந்த கேள்வியை தெரிந்துதான் கேட்டீர்களா?  ரி-20 போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? என கேட்டு சிரித்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு