11 மலையேற்ற வீரர்கள் ஒரே நேரத்தில் பலி!! -உத்தரகாண்ட் மாநிலத்தில் சோக சம்பவம்-

ஆசிரியர் - Editor II
11 மலையேற்ற வீரர்கள் ஒரே நேரத்தில் பலி!! -உத்தரகாண்ட் மாநிலத்தில் சோக சம்பவம்-

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், மலையேறிய 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், லம்ககா கணவாய் பகுதியில் அவர்கனில் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

குறித்த பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அவர்கள் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மலையேற்ற வீரர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வழிகாட்டிகள் என மேலும் சிலர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலங்கு வானுர்திகள் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் பணிகளில் அந்நாட்டு விமானப் படையினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு