யாழ்.காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் இந்திய கடற்படையிடம் இன்று கையளிக்கப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் இந்திய கடற்படையிடம் இன்று கையளிக்கப்படுகிறது..!

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் படகுமோதியதில் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்திய இழுவை படகு மீனவரின் உடலம் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் தேதி ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் இரவு யாழ்பாணம் காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது 

இவர்கள் சென்ற படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல் யாழ்ப்பாணத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து காலை சுமார் 7 மணியளவில் 

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடல் முறையாக இலங்கை கடற்படையினரிடம் தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் இந்திய அதிகாரிகளிடம் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு