ஏட்டிக்குப்போட்டி..! இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினால் கைது..

ஆசிரியர் - Editor I
ஏட்டிக்குப்போட்டி..! இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினால் கைது..

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மீனவர்கள் இருவரையும் இந்தியக் கடற்படையினர் கைது செய்து நாகபட்டினம் துறைமுகம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

அவர்கள் இருவரும் கரை கொண்டு செல்லப்பட்ட பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு