யாழ்.கொடிகாமம் பகுதியில் வள்வெட்டு குழு ரவுடிகளை முற்றுகையிட்ட இராணுவம்! வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் பகுதியில் வள்வெட்டு குழு ரவுடிகளை முற்றுகையிட்ட இராணுவம்! வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள்..

யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு குழு வன்செயலில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவம் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட நிலையில் வாள்களை வீசிவிட்டு ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் குறித்து மேலும் தொியவருவதாவது, கொடிகாமம் பகுதியில் வாள்களுடன் ரவுடிகள் தாக்குதலுக்கு தயாராக உள்ளனர் என படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து படையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட நிலையில் அங்கு கூடியிருந்த ரவுடிகள் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதன்போது வாள்கள், கோடரிகளை படையினர் மீட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு