சீனாவில் மீள பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்? -பாடசாலைகள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவு-

ஆசிரியர் - Editor II
சீனாவில் மீள பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்? -பாடசாலைகள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவு-

சீனா நாட்டின் வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் மீள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 5 ஆது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

கொரோனா தொற்று பரவலை தடுக்க 40 இலட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லான்சோ நகரில் இருந்து வேறு மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா சற்று குறைந்ததால் இயல்புநிலைக்கு திரும்பிய சீன மக்கள், மீள புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் அறிந்ததும் கவலை அடைந்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு