மும்பை கட்டிடத்தில் திடீர் தீ விபத்து!! -19 மாடியில் இருந்து தப்பிக்க குதித்தவர் பலி-

ஆசிரியர் - Editor II
மும்பை கட்டிடத்தில் திடீர் தீ விபத்து!! -19 மாடியில் இருந்து தப்பிக்க குதித்தவர் பலி-

இந்தியாவின் மும்பையில் அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மராட்டியமாநிலம் மும்பை கரே ரோட்டின் லோயர் பரேல் பகுதியில் உள்ள அவிக்னானா பார்க் குடியிருப்பின் 60 மாடி கட்டிடத்தில் உள்ள 19 வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த தீ விபத்து பிற்பகல் 12 மணி அளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட  19 ஆவது மாடியில்  ஜன்னல் வழியாக வெளியே வர முயன்ற ஒருவர் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த நபர் கீழே விழும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு