யாழ்.நீர்வேலியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! அடக்குவாரா ஆளுநர்?

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! அடக்குவாரா ஆளுநர்?

யாழ்.நீர்வேலி தெற்கு J/268 கிராமசேவகர் பிரிவில் நேற்று இரவு வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வீட்டிலிருந்தவர்கள் மீதும் வீட்டிலிருந்த பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ரவுடிகள் வாள்கள், கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டார் கூறியுள்ளனர். 

இதேவேளை நேற்றய தினம் காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கில் வன்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முப்படை தளபதிகள், பொலிஸார், அதிரடிப்படையினருடன் பேச்சு நடத்தியிருந்தார். 

அந்த பேச்சு நடந்த அன்று மாலையே வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு