யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவு துாபி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவு துாபி..! பணிப்பாளர் தகவல்..

இந்திய அமைதிப்படையினால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக மிக விரைவில் நினைவு துாபி ஒன்று நிறுவப்படும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இந்திய அமைதிப்படையினால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றிருந்தது. நினைவேந்தலில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் 

தமது வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு