மகனை காண சிறைக்குச் சென்ற ஷாருக்கான்!!

ஆசிரியர் - Editor II
மகனை காண சிறைக்குச் சென்ற ஷாருக்கான்!!

போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறைச்சாலையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் இன்று வியாழக்கிழமை ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றுள்ளார்.

மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3 ஆம் திகதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகரிகள் அதிரடி சோதனை நடத்திய போது அக்கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது. 

இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் பிணை கோரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் பிணை வழங்கப்படவில்லை. மேலும் அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. 

இதையடுத்து அவர் தனக்கு பிணை வழங்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிணை கோரி ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். 

இந்த நிலையில் சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக நடிகர் ஷாருக்கான் நேற்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த 3 ஆம் திகதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பின் முதல் முறையாக ஷாருக்கான் இன்று வியாழக்கிழமை தன் மகனை நேரில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு