மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் வேட்டையில் தமிழ்கட்சி..!

ஆசிரியர் - Editor I
மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் வேட்டையில் தமிழ்கட்சி..!

மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அரசு கூறிவரும் நிலையில் வடடமாகாணசபை வேட்பாளர் வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதன்படி வடக்கில் பிரதான தமிழ்கட்சி ஒன்று தேர்தல் வேட்பாளராக பல்கலைக்கழகம், மற்றும் ஆணைக்குழுக்களில் அங்கம் பணியாற்றியவர்களிடம் வேட்பாளருக்கான பேச்சில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த தமிழ் கட்சியின் தலைவர் மாகாணசபை தேர்தலில் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் இதற்கான மாற்று ஒருவரை  நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகிறது. மாவை சேனாதிராஜாவை 

முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பு இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

7

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு