யாழ்.காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு!

யாழ்.காரைநகர் கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகு மோதியதில் இந்திய ரோலர் படகுடன் கடலில் மூழ்கி காணாமல் போன இந்திய மீனவரின் சடலம் சற்று முன்னர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் ஊடுருவிய இந்திய மீன்பிடிப் படகிலுள்ள மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய முயன்ற சமயம் கடற்படையினரினதும் மீனவர்களதும் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு நொருங்கி கடலில் மூழ்கியது. 

இதன்போது படகில் இருந்த மூவரில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். இருந்தபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரின் உடல் சற்று முன்னர் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. 

காங்கேசன்துறை கொண்டுவரப்படும் உடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு