யாழ்.பருத்தித்துறையில் வீட்டு பூசைக்கு படைத்த உணவை சாப்பிட்ட முதாட்டி மயங்கி விழுந்து மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் வீட்டு பூசைக்கு படைத்த உணவை சாப்பிட்ட முதாட்டி மயங்கி விழுந்து மரணம்..!

யாழ்.பருத்தித்துறை - கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையலிடப்பட்ட அவல், கடலையை உட்கொண்ட மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு கரணவாய் - அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆறுமுகம் யோகம்மா (வயது - 82) என்பவரே உயிரிழந்தார்.

நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்ட அவல், கடலை என்பவற்றை 

உண்டபோதே குறித்த மூதாட்டிமயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு