ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய சசிகலா!!

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய சசிகலா!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, 5 வருடங்களாக மனத்தில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிந்து பிப்ரவரியில் சிறையில் இருந்து வெளிவந்தார்.

அப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்தில் பணிகள் நடைபெற்று வந்ததால் அங்குச் செல்லவில்லை. இன்று சனிக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எம்.ஜி.ஆர் அண்ணா நினைவிடங்களிலும் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தனது மனத்தில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு