பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்!!

ஆசிரியர் - Editor II
பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றவர்களை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

குண்டூர் அரச வைத்தியசாலையில் பிரியங்கா என்ற பெண்ணுக்கு கடந்த அக்டோபர் 13 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வெள்ளிக்கிழமை இரவில் பாட்டியின் அருகே படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையை காலையில் காணவில்லை.

இது குறித்து பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் சி.சி.டிவியை சோதனையிட்ட போது, வைத்தியசாலையில் ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேகத்திற்கிடமாக சுற்றிவந்ததும், அந்த ஆண் கட்டைப்பையுடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றவர்களை, பொலிஸார் தேடி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு