எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு எமக்கு உண்டு!! -டோனி பெருமிதம்-

ஆசிரியர் - Editor II
எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு எமக்கு உண்டு!! -டோனி பெருமிதம்-

நாங்கள் துபாயில் விளையாடினாலும் சொந்த இடமான சென்னையில் விளையாடியது போல் உணர்கிறோம் என்று சி.எஸ்.கே அணித் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை குவித்தது. 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 

இதனால்  கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பின்  ரசிகர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சி.எஸ்.கே அணித் தலைவர் டோனி  கூறியதாவது:-

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் சி.எஸ்.கே. ரசிகர்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. 

நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு